இந்த வருடத்தில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவு!
Jan 18, 2021 229 views Posted By : YarlSri TV
இந்த வருடத்தில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவு!
இலங்கையில் இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவாகியுள்ளனர்.
அதன்படி 763 புதிய கொரோனா நோயாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாட்டின் மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 53 ஆயிரத்து 76 ஆக உயர்வடைந்துள்ளது.
குறித்த கொரோனா நோயாளர்களில் 747 பேர் மினுவாங்கொட – பேலியகொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய இருவர் சிறைச்சாலை கொத்தணியுடனும் 14 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, மினுவாங்கொட – பேலியகொட கொரோனா கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 49 ஆயிரத்து 274 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 264 பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago