சித்ராவின் மரணம் தற்கொலை இல்லை “: தடவியல் நிபுணர் சொல்லும் அதிர்ச்சி தகவல்!
Dec 10, 2020 306 views Posted By : YarlSri TV
சித்ராவின் மரணம் தற்கொலை இல்லை “: தடவியல் நிபுணர் சொல்லும் அதிர்ச்சி தகவல்!
நடிகை சித்ரா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெங்களூருவைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் தினேஷ் ராவ் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் சென்னை நசரத்பேட்டை உள்ள தனியார் விடுதியில் தனது கணவர் ஹேம்நாத்துடன் தங்கி இருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். அத்துடன் குளிக்க செல்வதால் கணவர் ஹேம்நாத்தை சித்ரா வெளியே அனுப்பியதாகவும் போலீசில் ஹேம்நாத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சித்ரா – ஹேம்நாத் இருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட நிலையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி இருவரும் பெற்றோர் முன்னிலையில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் சித்ரா திருமணம் செய்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மறைந்த டிவி நடிகை சித்ராவின் தந்தை காமராஜ், தனது மகளின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை போலீசார் கண்டுபிடிக்க வலியுறுத்தி நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த தடவியல் நிபுணர் தினேஷ் ராவ் சித்ராவின் சடலத்தின் புகைப்படங்களை ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து பிரபல தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நடிகை சித்ராவின் முகத்தில் இடது பக்கத்தில் நகக்கீறல்கள் ஏற்பட்டது எப்படி?தற்கொலை என்றால் கழுத்தில் அடையாளம் இல்லையே? போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார். அத்துடன் பொதுவாக தூக்கில் தொங்கினால் கழுத்தில் அடையாளம் இருக்க வேண்டியது அவசியம். கண் ,மூக்கு, வாய் பகுதியில் காயங்கள் இருந்தால் அது கொலை முயற்சி என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago