கண்டி- போகம்பரை கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு!
Dec 05, 2020 245 views Posted By : YarlSri TV
கண்டி- போகம்பரை கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு!
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, கண்டி மாவட்டத்தில் போகம்பரை கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கண்டி– போகம்பரை கிராமத்தில் 25பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் அதிகாரி வைத்தியர் நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் 568பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 301பேர், மாத்தளை மாவட்டத் தில் 52பேர், நுவரெலியா மாவட்டத்தில் 63பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கண்டி மாவட்டத்தில் போகம்பரை கிராமத்தில் 10பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் போகம்பரை கிராமத்தில் 13குடும்பங்களைச் சேர்ந்த 25பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவேதான் குறித்த பகுதியைத் தனிமைப்படுத்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1506 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1506 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1506 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1507 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1507 Days ago