Skip to main content

சமுதாயத்தில் வாழமுடியாத நாயகன் சொந்த ஊரில் இருந்து வெளியேறி புறநகரில் தஞ்சமடைகிறார்!

Nov 23, 2020 243 views Posted By : YarlSri TV
Image

சமுதாயத்தில் வாழமுடியாத நாயகன் சொந்த ஊரில் இருந்து வெளியேறி புறநகரில் தஞ்சமடைகிறார்! 

சாதிப் பிரச்சனையால் சமுதாயத்தில் வாழமுடியாத நாயகன் சொந்த ஊரில் இருந்து வெளியேறி புறநகரில் தஞ்சமடைகிறார். அந்த இடத்திலும் சமூகம் அவரை வாழவிடமால் செய்கிறது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நாயகன் எத்தகைய முயற்சிகளை எடுக்கிறார் என்பதை கமர்ஷியலாக சொல்லியுள்ள படம்தான் ‘புறநகர்’.



நாயகன் கமல் கோவின்ராஜ், ஜிம்னாஸ்டிக் வீரரான இவர் இப்படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார். ஆக்‌ஷன், சென்டிமெண்ட், காதல் காட்சி என அனைத்திலும் நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். நாயகிகளாக வரும் அஸ்வினி சந்திரசேகர், சுகன்யா ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.



வில்லனாக வரும் அனல் அண்ணாமலை கவனிக்க வைக்கிறார். தேனி முருகன், கதிரவகண்ணன், செல்வம், தயாளன், ரகு, கணேஷ், தாம்பரம் சிங்கம் ஆகியோர் நேர்த்தியாக நடித்துள்ளனர். 



இலங்கை தமிழர்களின் துயரத்தை சொல்லும் எல்லாளன் படத்தை இயக்கிய மின்னல் முருகன் இப்படத்தை இயக்கி உள்ளார். சாதிக் கொடுமைகள் பற்றி சொல்ல முயற்சித்திருக்கும் அவர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். பல இடங்களில் லாஜிக் மீறல்கள் அப்பட்டமாக தெரிவது படத்திற்கு பின்னடைவு. 



இந்திரஜித் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. பின்னணி இசையும் சுமார் தான். விஜய் திருமூலத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். 



மொத்தத்தில் ‘புறநகர்’ சுவாரஸ்யம் குறைவு.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை