Skip to main content

குடும்பத் தகராறில் 2 குழந்தைகளுடன் 7 மாத கர்ப்பிணி தாய் கிணற்றில்!

Nov 15, 2020 335 views Posted By : YarlSri TV
Image

குடும்பத் தகராறில் 2 குழந்தைகளுடன் 7 மாத கர்ப்பிணி தாய் கிணற்றில்! 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை மணியார் பாளையம் அருகே உள்ள கீழாத்துக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் -ரேவதி தம்பதி. இவர்களுக்கு புவனா(5), யமுனா(2) என்ற மகள்கள் உள்ள நிலையில் ரேவதி மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்து 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.



 கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. அந்த வகையில் சம்பவத்தன்றும் இருவரும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நேற்று குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டை விட்டு சென்றுள்ளார் ரேவதி. இரவு முழுவதும் அவர்கள் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடி வந்துள்ளனர். அப்போது அங்குள்ள விவசாய கிணற்றில் கர்ப்பிணி ரேவதி தனது குழந்தைகளுடன் சடலமாக மிதந்துள்ளார்.



 சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் மூவரின் உடல்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை