வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கவுள்ளதாக காவல்துறை ஊடகபேச்சாளர் அலுவலகம்!
Nov 15, 2020 237 views Posted By : YarlSri TV
வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கவுள்ளதாக காவல்துறை ஊடகபேச்சாளர் அலுவலகம்!
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 12.00 மணியுடன் நீக்கவுள்ளதாக காவல்துறை ஊடகபேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சநிலைமை காரணமாக மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டது.
அத்தோடு, மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து பேருந்து சேவைகளும் கடந்த 11 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேல் மாகாணத்தின் பல இடங்கள் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சுகாதாரப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1505 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1505 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1505 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1506 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1506 Days ago