Skip to main content

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Nov 15, 2020 239 views Posted By : YarlSri TV
Image

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.



அத்துடன் இன்று சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல் நாளை புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ,ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை