Skip to main content

சாலையோரம் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு, காவல்துறை அதிகாரி ஒருவர் பிரியாணி வழங்கிய நிகழ்வு!

Nov 14, 2020 231 views Posted By : YarlSri TV
Image

சாலையோரம் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு, காவல்துறை அதிகாரி ஒருவர் பிரியாணி வழங்கிய நிகழ்வு! 

திண்டுக்கல்லில் சாலையோரம் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு, காவல்துறை அதிகாரி ஒருவர் பிரியாணி வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



திண்டுக்கல் நகர துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் மணிமாறன். இவர் தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று நகரில் சாலையோரம் வசித்து வரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கினார்.



இதனை அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுகொண்டு உண்டு மகிழ்ந்தனர். கல்லுக்குள் ஈரம் உண்டு என்பதைப் போல, துணை கண்காணிப்பாளரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை