டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த துணை ராணுவ படையினரின் மருத்துவர்கள்!
Nov 17, 2020 254 views Posted By : YarlSri TV
டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த துணை ராணுவ படையினரின் மருத்துவர்கள்!
டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகள், கொரோனா 3-வது அலை என்று கருதப்படுகிறது. தலைநகரில் இந்த தொற்றை கட்டுக்குள் கொண்டு வர உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் தீவிர ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து 11 புதிய முடிவுகள் எடுக்கப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்த செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அந்த முடிவின்படி தமிழகம், அசாம், ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து துணை ராணுவ படையினரின் மருத்துவர்கள், துணை மருத்துவர்களை கொரோனா பணிக்காக களம் இறக்குகிறார்கள். இதற்காக துணை ராணுவத்தை சேர்ந்த 75 டாக்டர்கள், 250 துணை மருத்துவர்கள் டெல்லிக்கு விரைகிறார்கள். இந்த மருத்துவ குழு ஓரிரு நாட்களில் டெல்லியை அடைந்து பணியை துரிதமாக தொடங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
10 ஆயிரம் படுக்கைகள் கொண்டதாக சத்தர்பூர் கோவிட் மருத்துவமையத்தை வலுப்படுத்துவது, ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, தினசரி பி.சி.ஆர். சோதனைகளை இரட்டிப்பாக்குதல் உள்ளிட்ட முடிவுகளும் எடுக்கப்பட்டு உள்ளன.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1495 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1495 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago