ஒரு கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல்!
Nov 12, 2020 266 views Posted By : YarlSri TV
ஒரு கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல்!
ஒரு கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் இருந்த பயணிகளிடம் கலால் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த 2 பயணிகளை பிடித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் இருவரும் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி இடுப்பில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 62 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 1.2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே விமானத்தில் வந்த 5 பயணிகள் வரி செலுத்திவிட்டு கொண்டு வந்த தங்க நகைகள் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 46 லட்ச ரூபாய் மதிப்புடைய தங்க நகைகளை பறிமுதல் செய்த கலால் வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.சார்ஜாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1.09 கோடி தங்கம் பறிமுதல்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago