Skip to main content

5 மாவட்டங்களில் 4 மற்றும் 5 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை!

Nov 02, 2020 299 views Posted By : YarlSri TV
Image

5 மாவட்டங்களில் 4 மற்றும் 5 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை! 

5 மாவட்டங்களில் 4 மற்றும் 5 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.



 மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.



தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 28ம் தேதி தொடங்கிய நிலையில்,  மழை நீர் சாலைகளில் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதே போல பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மழையில் இருந்து மக்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை