காத்திருக்கும் ஒற்றை யானை’.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!
Nov 07, 2020 254 views Posted By : YarlSri TV
காத்திருக்கும் ஒற்றை யானை’.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!
சத்தியமங்கலம் அருகே கரும்பு லாரியை எதிர்பார்த்து ஒற்றை யானை ஒன்று காத்திருப்பதால், வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பண்ணாரி வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகமாக இருக்கின்றன. காட்டில் இருந்து உணவு தேடி குடியுருப்பு பகுதிகளுக்கு செல்லும் யானைகள், லாரியில் இருந்து வீசப்படும் கரும்புகளை சாப்பிட்டு பழகியதால் பண்ணாரி சோதனை சாவடி அருகே முகாமிடுகின்றன.
இந்நிலையில் கரும்பு லாரியை எதிர்பார்த்து பண்ணாரி கோவில் அருகே மக்னா யானை ஒன்று, நெடுநேரமாக காத்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பண்ணாரி சோதனைச்சாவடி அருகே அந்த யானை நின்று கொண்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், நெடுநேரம் காத்திருந்த பிறகு அந்த யானை காட்டுக்குள் சென்று விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பண்ணாரி முதல் ஆசனூர் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago