ரூ.221 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவங்கிவைத்த முதல்வர்!
Nov 06, 2020 269 views Posted By : YarlSri TV
ரூ.221 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவங்கிவைத்த முதல்வர்!
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டத்தில் ரூ.221 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல்லும் நாட்டினார்.
முன்னதாக கொரோனா ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு 189 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 67 முடிவற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும், 131 கோடிய 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 123 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், இன்கோ சேர்வ் நிறுவனத்தின் புதிய தேயிலை உற்பத்தி பொருட்களையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் வேலுமணி, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, இன்கோசேர்வ் தலைமை செயல் அலுவலர் சுப்ரியா சாஹு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1495 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1495 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago