50% ஷேர் தந்தால் விபிஎஃப் கட்டணத்தை ஏற்றுக்கொள்கிறோம்திரையரங்கு உரிமையாளர்கள் புதிய நிபந்தனையை விதித்துள்ளனர்!
Nov 05, 2020 325 views Posted By : YarlSri TV
50% ஷேர் தந்தால் விபிஎஃப் கட்டணத்தை ஏற்றுக்கொள்கிறோம்திரையரங்கு உரிமையாளர்கள் புதிய நிபந்தனையை விதித்துள்ளனர்!
வசூலில் 50% பங்கு தந்தால் விபிஎப் கட்டணத்தை ஏற்கிறோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் புதிய நிபந்தனையை விதித்துள்ளனர்.
பட வசூலில் அனைத்து தியேட்டர்களுக்கும் 50% ஷேர் தந்தால் விபிஎஃப் கட்டணத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். அவசர ஆலோசனையை நடத்தி படத்தயாரிப்பாளர்களுக்கு நிபந்தனையை விதித்தனர் தியேட்டர் அதிபர்கள். தியேட்டர்களுக்கான 50%, 60%, 75% ஷேர்களை ஒரே மாதிரியாக 50% என வழங்க தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 50% ஷேர் முடிவுக்கு ஒப்புக்கொள்ளாவிடில் முத்தரப்பு பேச்சை புறக்கணிக்க தியேட்டர் அதிபர்கள் திட்டமிட்டுள்ளனர்.
வரும் 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. விபிஎஃப் கட்டணத்தை திரையரங்குகள் செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா அறிவித்தார். விபிஎஃப் கட்டணத்தை ஏற்க தயாரிப்பாளர்களை தொடர்ந்து தமிழக தியேட்டர் அதிபர்களும் மறுத்தனர். விபிஎஃப் கட்டண விவகாரத்தில் தயாரிப்பாளர்களுடன் தியேட்டர் அதிபர்களும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாகவும், இந்த முடிவுக்கு தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில் மற்ற மொழி படங்களை திரையிடவும் முடிவெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago