மைக்பொம்பியோ பயணத்தை நிறைவு செய்து கொண்டு மாலைதீவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்!
Oct 28, 2020 262 views Posted By : YarlSri TV
மைக்பொம்பியோ பயணத்தை நிறைவு செய்து கொண்டு மாலைதீவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்!
மைக்பொம்பியோ, ஸ்ரீலங்காவிற்கு இராஜதந்திர பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில், பயணத்தை நிறைவுசெய்து கொண்டு இன்று பிற்பகல் மாலைதீவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இலங்கை மக்களின் வெற்றிகரமான வளர்ச்சியில் நிலைத்திருக்கவே அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் சீனா மிகவும் மாறுபட்ட பார்வையைக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஜனநாயக, அமைதியான, வளமான, மற்றும் முழு இறையாண்மை கொண்ட இலங்கையுடனான நமது பங்களிப்பை வலுப்படுத்த அமெரிக்கா முயல்கிறது.
ஒரு வலுவான இறையாண்மை கொண்ட ஸ்ரீலங்கா, உலக அரங்கில் அமெரிக்காவிற்கு ஒரு சக்திவாய்ந்த மூலோபாய பங்காளியாகும். இது ஒரு திறந்த இந்து-பசிபிக் ஒரு களங்கரை விளக்கமாக இருக்கலாம் என்றும் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது சீனாவின் நோக்கத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மோசமான உடன்படிக்கைகள், இறையாண்மையை மீறுதல், நிலம் மற்றும் கடலில் சட்டவிரோத அடிப்படையில் சீனாவின் வேட்டையாடும் தன்மையை பார்க்கமுடிகிறது.
அமெரிக்காவை பொறுத்தவரையில் அது ஸ்ரீலங்காவை ஒரு நண்பராகவும் ஒரு பங்காளியாகவும் கருதுகிறது. இந்தநிலையில் பொறுப்புக் கூறல், நீதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு அர்த்தமுள்ள, உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதாக ஸ்ரீலங்கா அளித்துள்ள உறுதிமொழிகளை அது நிறைவேற்றும் என்று அமரிக்கா எதிர்பார்ப்பதாகவும் மைக்பொம்பியோதெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago