Skip to main content

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா பரவலினைத் தடுப்பதற்காக காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை!

Oct 22, 2020 295 views Posted By : YarlSri TV
Image

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா பரவலினைத் தடுப்பதற்காக காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை! 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா பரவலினைத் தடுப்பதற்காக காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் விசேட விழிப்பூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



இதனடிப்படையில் அம்கோர் நிறுவனத்தின் தன்னார்வு தொண்டு பணிகளில் ஈடுபட்டு வரும் தொண்டர்களின் பங்களிப்புடன் இன்று (23.10.2020) மட்டக்களப்பு நகர்புரத்தின் ஐந்து இடங்களில் இவ்விழிப்பூட்டல் நிகழ்வுகள் இடம்பெற்றன. 



பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களான பேருந்து தரிப்பு நிலையம் மற்றும் அதனை அண்டிய வர்த்தக நிலையங்கள், ஊரணி சந்தி, அரசடி சுற்றுவட்டம், எரிபொருள் கூட்டுத்தாபன சந்தி மற்றும் தன்னாமுனை ஆகிய தெரிவு செய்யப்பட்ட ஐந்து இடங்களிலும் இவ்விழிப்பூட்டல் நிகழ்வுகள் இடம்பெற்றன.



அரச மற்றும் தனியார் போக்குவரத்து சாதனங்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் ஏனைய வாகனங்களில் பயணிக்கும் மக்கள், பொருட்கள் கொள்வனவு செய்ய வரும் மக்கள் முகக் கவசத்தினை முறையாக அணிவதற்கு அறிவூட்டப்பட்டனர்.



மேலும் முகக் கவசம் அணியாதவர்களுக்கு இரானுவத்தினரால் இலவலசமாக முகக்கவசம் வழங்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் செய்யப்பட்டது. 



காவல்துறை மற்றும் இரானுவம் இணைந்து மேற்கொண்ட இவ்விசேட விழிப்பூட்டல் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராம சேவகர் பிரிவுகளில் தொண்டு பணியில் ஈடுபட்டு வரும் அம்கோர் அமைப்பின் தொண்டர்கள் இணைந்து பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

11 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை