மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பெற்றோருக்கு ஆயுள் தண்டனை!
Oct 17, 2020 192 views Posted By : YarlSri TV
மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பெற்றோருக்கு ஆயுள் தண்டனை!
பொள்ளாச்சி அருகே மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதி, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் வசித்து வருகின்றனர். அங்கு நார் உரிக்கும் தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு 12 வயதில் மகள் இருக்கிறார். இந்த சிறுமியை அவரது தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். இதனை அறிந்த சிறுமியின் தாயும் அவருக்கு உடந்தையாக இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இரண்டு பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் தந்தைக்கும் அதற்கு உடந்தையாக இருந்த தாயாருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த சிறுமி போன்று நாட்டில் பல சிறுமிகள் சித்ரவதைக்கு உள்ளாகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago