மகாபாரத்தின் சகுனி போன்றவர் திக்விஜய சிங். தனது (காங்கிரஸ்) கட்சியை அழிக்கும்போது நிம்மதி அடைவார் என சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்!
Oct 19, 2020 325 views Posted By : YarlSri TV
மகாபாரத்தின் சகுனி போன்றவர் திக்விஜய சிங். தனது (காங்கிரஸ்) கட்சியை அழிக்கும்போது நிம்மதி அடைவார் என சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்!
மகாபாரத்தின் சகுனி போன்றவர் திக்விஜய சிங். தனது (காங்கிரஸ்) கட்சியை அழிக்கும்போது நிம்மதி அடைவார் என சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கார்க் மாவட்டம் பியோரா சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நாராயண் சிங் பரிவார் என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ராஜ்கார்க்கில் பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங்கை சிவ்ராஜ் சிங் சவுகான் கடுமையாக தாக்கி பேசினார். சிவ்ராஜ் சிங் சவுகான் பேசுகையில் கூறியதாவது:
திக்விஜய சிங் மகாபாரதத்தின் சகுனி. அவர் தனது கட்சியை அழிக்கும்போதுதான் நிம்மதி அடைவார். ஒன்றைரை ஆண்டுகளில் காங்கிரஸின் பாவங்கள் நிரம்பியுள்ளன. இது ஜோதிராதித்ய சிந்தியாவால் வெடித்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago