Skip to main content

மார்தோமா திருச்சபை தலைவர் ஜோசப் மார்தோமா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்!

Oct 19, 2020 224 views Posted By : YarlSri TV
Image

மார்தோமா திருச்சபை தலைவர் ஜோசப் மார்தோமா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்! 

கேரள மாநிலத்தில் கத்தோலிக்க, அப்போஸ்தல திருச்சபையின் அங்கமாக மார்தோமா திருச்சபை இயங்கி வருகிறது. இதன் 21-வது தலைவராக விளங்கியவர், ஜோசப் மார்தோமா (வயது 89).



இவர் கணைய புற்றுநோய் பாதித்த நிலையில், திருவல்லாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார்.



இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், “டாக்டர் ஜோசப் மார்தோமா மனித குலத்துக்கு சேவை செய்த குறிப்பிடத்தக்க ஆளுமை ஆவார். ஏழைகள் மற்றும் நலிவடைந்தோர் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைத்தவர். அவரது உன்னத லட்சியங்கள் எப்போதும் நினைவில் இருக்கும்” என கூறி உள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

21 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை