பிரபல டிக் டாக் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி; காரணம் இது தான்!
Oct 10, 2020 284 views Posted By : YarlSri TV
பிரபல டிக் டாக் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி; காரணம் இது தான்!
டிக் டாக் பிரபலமான ஜி.பி முத்து தற்கொலைக்கு முயன்றதால், அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிக் டாக் செயலி மூலமாக, மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஏராளம். அவர்களுள் திருச்செந்தூர், உடன்குடியை சேர்ந்த ஜி.பி.முத்துவும் ஒருவர். டிக் டாக் பிரபலமான சூர்யாவுடன் இணைந்து இவர் செய்த டிக் டாக்கும், எதார்த்தமான இவரது பேச்சும் celebrity என சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரபலமாகி விட்டது. மரக்கடை தொழில் செய்து வரும் இவர், பிசினஸ்ஸே 2ஆவது தான் டிக் டாக் தான் எனக்கு முக்கியம் என சொல்லும் அளவிற்கு டிக் டாக்கில் மூழ்கி கிடந்தார்.
காலையில் பல் துலக்குவது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை டிக் டாக்கையே உலகமாக நினைத்துக் கொண்டிருந்த ஜி.பி முத்து, டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதில் இருந்து பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். டிக் டாக் பிரபலங்கள் பலருக்கு செயலி தடை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஜி.பி முத்து பிரதமர் மோடிக்கே கோரிக்கை வைக்கும் அளவுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில், ஜிபி முத்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. வயிற்று வலி காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், அவர் குடும்ப பிரச்னையால் தான் தற்கொலைக்கு முயன்றதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago