கங்கையில் சுமார் 4,900 பேரின் அஸ்தி, ஒரே நாளில் கரைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது!
Oct 06, 2020 262 views Posted By : YarlSri TV
கங்கையில் சுமார் 4,900 பேரின் அஸ்தி, ஒரே நாளில் கரைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது!
டெல்லியை தலைமையகமாக கொண்டு செயல்படும் ‘தேவோதன் சேவா சமிதி’ என்கிற தன்னார்வ அமைப்பினர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் தகனம் செய்யப்படும் அனாதை பிணங்களின் அஸ்தியை சேகரித்து கங்கையில் கரைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்து தர்மத்தின்படி இறந்தவரின் சாம்பலை கரைப்பதால் அவர்களது ஆத்மா சாந்தி அடையும் என்ற நோக்கத்தில் இந்த பணியை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தின் இடையில் இருந்து செப்டம்பர் மாதம் வரை அவர்களால் அனாதை பிணங்களின் அஸ்தியை சேகரிக்க முடியவில்லை
இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அவற்றை சேகரித்தனர். இந்த வகையில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார தகன பகுதிகளில் மொத்தம் 4 ஆயிரத்து 896 அனாதை பிணங்களின் அஸ்தி பைகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் தன்னார்வ அமைப்பினர் அவற்றை ஹரித்துவாருக்கு எடுத்துச் சென்று, வேதங்கள் முழங்க கங்கை நதியில் கரைத்தனர்.
சுமார் 4,900 பேரின் அஸ்தி, ஒரே நாளில் கங்கையில் கரைக்கப்பட்ட இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago