Skip to main content

கொரோனா தடுப்பு பணி குறித்து விளக்கம் அளிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார்!

Oct 05, 2020 229 views Posted By : YarlSri TV
Image

கொரோனா தடுப்பு பணி குறித்து விளக்கம் அளிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார்! 

கொரோனா தடுப்பு பணி குறித்து விளக்கம் அளிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார்.



தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல், கொரோனா பாதிப்பு என இக்கட்டான சூழல் நிலவி வரும் அதே வேளையில், ஆளும் அரசான அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பெரும் குழப்பம் நீடிக்கிறது. வரும் 7ம் தேதி இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தான் முதல்வர் பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசி வருகிறார்.



சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெறும் இந்த சந்திப்பில் அமைச்சர்கள் கே.பி அன்பழகன், சி.வி சண்முகம், விஜயபாஸ்கர், தலைமை செயலர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதில், அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாக பிரிப்பு மற்றும் திருவள்ளூர் பல்கலைக் கழகம் குறித்தும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் ஆளுநரிடம் விளக்கம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.



மேலும், கொரோனா நடவடிக்கை பற்றிய அறிக்கையை முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்ய உள்ளதாகவும் முதல்வர் வேட்பாளர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை