தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 369 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்!
Oct 02, 2020 252 views Posted By : YarlSri TV
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 369 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்!
தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 688 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 3 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 369 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 516 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் - 183
செங்கல்பட்டு - 2,046
சென்னை - 11,615
கோவை - 5,060
கடலூர் - 1,500
தர்மபுரி - 900
திண்டுக்கல் - 408
ஈரோடு - 1,110
கள்ளக்குறிச்சி - 393
காஞ்சிபுரம் - 887
கன்னியாகுமரி - 816
கரூர் - 469
கிருஷ்ணகிரி - 813
மதுரை - 722
நாகை - 470
நாமக்கல் - 1,063
நீலகிரி - 850
பெரம்பலூர் - 130
புதுக்கோட்டை - 727
ராமநாதபுரம் - 139
ராணிப்பேட்டை - 458
சேலம் - 2,753
சிவகங்கை - 239
தென்காசி - 399
தஞ்சாவூர் - 1,709
தேனி - 493
திருப்பத்தூர் - 512
திருவள்ளூர் - 1,641
திருவண்ணாமலை - 973
திருவாரூர் - 964
தூத்துக்குடி - 548
திருநெல்வேலி - 907
திருப்பூர் - 1,615
திருச்சி - 748
வேலூர் - 869
விழுப்புரம் - 967
விருதுநகர் - 251
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 2
உள்நாடு - 18
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2
மொத்தம் - 46,369
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago