கர்நாடக சுற்றுலா மற்றும் கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சி.டி.ரவி. தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நேரில் வழங்கியுள்ளார்!
Oct 05, 2020 270 views Posted By : YarlSri TV
கர்நாடக சுற்றுலா மற்றும் கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சி.டி.ரவி. தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நேரில் வழங்கியுள்ளார்!
கர்நாடக சுற்றுலா மற்றும் கன்னட வளர்ச்சித்துறை மந்திரியாக பணியாற்றி வருபவர் சி.டி.ரவி. சிக்கமகளூரு (மாவட்டம்) தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்டது. கட்சி மேலிடம் உத்தரவிட்டால் மந்திரி பதவியை ராஜினாமா செய்து முதல்-மந்திரியிடம் கடிதம் கொடுப்பேன் என்று சி.டி.ரவி கூறினார்.
இதற்கிடையே மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், பா.ஜனதாவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.டி.ரவி மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறினார். இந்த நிலையில் மந்திரி சி.டி.ரவி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நேரில் வழங்கியுள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்பது குறித்து எடியூரப்பா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago