ஹத்ராஸ் இளம்பெண் தாக்கப்பட்டு பலியான சம்பவத்தில், மாவட்ட கலெக்டரை நீக்குமாறு பிரியங்கா, மாயாவதி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்!
Oct 05, 2020 291 views Posted By : YarlSri TV
ஹத்ராஸ் இளம்பெண் தாக்கப்பட்டு பலியான சம்பவத்தில், மாவட்ட கலெக்டரை நீக்குமாறு பிரியங்கா, மாயாவதி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்!
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான பட்டியல் இன இளம்பெண், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டும், தாக்கப்பட்டும் பலியானார்.
அந்த குடும்பத்தினரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்காவும் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், பிரியங்கா நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மாவட்ட கலெக்டர் தங்களை மிக மோசமாக நடத்தியதாக ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆயினும், கலெக்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவரை பாதுகாப்பது யார்? அவரை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும்.
குடும்பத்தினர் நீதி விசாரணை கேட்கும்போது, சி.பி.ஐ. விசாரணை என்றும், சிறப்பு புலனாய்வு விசாரணை என்றும் திசைதிருப்புவது ஏன்? உத்தரபிரதேச அரசு, தூக்கத்தில் இருந்து சற்று எழுந்தாலும் கூட குடும்பத்தினரின் கருத்துகளை கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஹத்ராஸ் மாவட்ட கலெக்டர் தங்களை மிரட்டியதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறியுள்ளனர். இருப்பினும், உத்தரபிரதேச அரசு கள்ள மவுனம் சாதிக்கிறது.
சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தபோதிலும், கலெக்டர் அங்கு இருக்கும்போது எப்படி பாரபட்சமற்ற விசாரணை நடக்கும். எனவே, கலெக்டரை இடைநீக்கம் செய்ய வேண்டும். மாநில அரசின் செயல் குறித்து மக்கள் சந்தேகப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago