குறுஞ்செய்தி அனுப்புவது திட்டமிட்ட இந்தித் திணிப்பு” : ராமதாஸ் ட்வீட்!
Oct 04, 2020 254 views Posted By : YarlSri TV
குறுஞ்செய்தி அனுப்புவது திட்டமிட்ட இந்தித் திணிப்பு” : ராமதாஸ் ட்வீட்!
ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்தால் இந்தியில் குறுஞ்செய்தி வருவதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ரயில் முன்பதிவு செய்வோருக்கு இந்தியில் குறுஞ்செய்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பயணிகள் நல சங்கம் ரயில்வே துறைக்கு புகார் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் தொடர்வண்டி முன்பதிவு குறுஞ்செய்தி இந்தியில் அனுப்பப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மத்திய அரசு சம்பந்தப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் தமிழிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்பட வேண்டும்.
அலுவல் மொழிச் சட்டம்-1976, தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது. இச்சட்டத்தின் ’சி’ பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் அனைத்து அலுவல் சார்ந்த அறிவிப்புகளும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும். அதை மீறி இந்தியில் குறுஞ்செய்தி அனுப்பியது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவுக்கான குறுஞ்செய்திகள் கடந்த இரு நாட்களாக இந்தியில் அனுப்பப்படுகின்றன. இந்தி பேசாத மக்களுக்கு இந்தியில் குறுஞ்செய்தி அனுப்புவது திட்டமிட்ட இந்தித் திணிப்பு ஆகும். இதை தொடர்வண்டித்துறை கைவிட வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago