நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் ஆய்வு!
Oct 03, 2020 313 views Posted By : YarlSri TV
நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் ஆய்வு!
தஞ்சை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதை அடுத்து உணவு அமைச்சர் காமராஜ் ஆய்வுகள் மேற்கொண்டார்
அம்மாபேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த அவர் ஞாயிற்றுக்கிழமையும் நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் என அறிவித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் காமராஜ், இந்த ஆண்டு சரியான பருவத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் அனைத்து இடங்களிலும் குறுவை சாகுபடி சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதையடுத்து,
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கபட்டு புதிய கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டத்தில் 227 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விளைச்சல் அதிகமுள்ள பகுதிகளில் , புதிய கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையும் கொள்முதல் செய்யப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் உடன் இருந்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago