தஞ்சையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் கொரோனா விழிப்புணர்வு பேரணியை நடத்தியது!
Oct 01, 2020 223 views Posted By : YarlSri TV
தஞ்சையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் கொரோனா விழிப்புணர்வு பேரணியை நடத்தியது!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு 5ம் முறையாக தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இன்று முதல் அளவானது. எல்லா சேவைகளுக்கும் அரசு அனுமதி வழங்கி இருந்தாலும், கொரோனா பற்றிய புரிதல் இல்லாததால் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தஞ்சையிலும் பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் களமிறங்கியது தஞ்சை மாவட்ட நிர்வாகம்.
தஞ்சை ரயில் நிலையத்தில் தொடங்கிய கொரோனா விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் கோவிந்தராவ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியின் முன்பு சிலம்பாட்ட வீரர்கள் ஆடிய படி செல்ல, கைகளில் கொரோனா விழுப்புணர்வு பற்றிய பதாகைகள் ஏந்திய படி பொதுமக்கள் பின்தொடர்ந்து சென்றனர். அந்த பேரணியில், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தஞ்சை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். தஞ்சையின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago