Skip to main content

அடுத்தடுத்து 4 விபத்துகள்’ தம்பதி பரிதாப பலி; இருவர் படுகாயம்!

Sep 30, 2020 206 views Posted By : YarlSri TV
Image

அடுத்தடுத்து 4 விபத்துகள்’ தம்பதி பரிதாப பலி; இருவர் படுகாயம்! 

ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியில் 2 மணி நேரத்திலேயே அடுத்தடுத்து 4 விபத்துகள் அரங்கேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியில் இன்று மாலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் டயர் திடீரென வெடித்ததால், எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில், பைக்கில் பயணித்த நபருக்கு படுகாயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



இதனைத் தொடர்ந்து, விண்ணமங்கலம் அருகே அதிவேகமாக வந்த கார் சாலையை கடக்க முயன்ற எருமை மாட்டின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனிடையே, மின்னூர் பகுதியில் எதிரெதிரே வேகமாக வந்த காரும் பைக்கும் மோதி விபத்துக்குள்ளானதில்



படுகாயம் அடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், நாட்றம்பள்ளி அருகே பைக் மீது கார் மோதிய கோர விபத்தில், பைக்கில் சென்ற தம்பதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்வாறு ஆலாங்குப்பம் பகுதியில் அடுத்தடுத்து நடந்த 4 விபத்துகள் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை