Skip to main content

சென்ற விவசாயியை கொன்ற முதலை; சிதம்பரம் அருகே பரபரப்பு!

Sep 29, 2020 276 views Posted By : YarlSri TV
Image

சென்ற விவசாயியை கொன்ற முதலை; சிதம்பரம் அருகே பரபரப்பு! 

விவசாய பணியை முடித்து விட்டு ஆற்றில் குளிக்க சென்ற விவசாயியை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் சிதம்பரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



சிதம்பரம் அருகே இருக்கும் பழைய நல்லார் கிராமத்தை சேர்ந்தவர் அறிவானந்தம்(56). இவர் விவசாயம் செய்து வருகிறார். வழக்கமாக, அறிவானந்தம் விவசாய பணிகளை முடித்து விட்டு தனது வீட்டுக்கு அருகே இருக்கும் ஆற்றில் குளிப்பார் என கூறப்படுகிறது. அந்த வகையில் நேற்றும் அறிவானந்தம் ஆற்றில் குளிக்கச் சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக, ஆற்றில் இருந்த முதலை ஒன்று அவரை கவ்வி இழுத்துச் சென்றிருக்கிறது.



தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அறிவானந்தத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அப்பகுதியில் நேற்று பெய்த கனமழையால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் தேடும் பணியில் தீயணைப்பு துறையினரும் காவல்துறையினரும் இறங்கி நிலையில், முதலையின் வாயில் இருந்து அறிவானந்தத்தின் உடல் மீட்கப்பட்டது. பின்னர், போலீசார் அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை