கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!
Sep 29, 2020 265 views Posted By : YarlSri TV
கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!
இந்தியாவின் சிலைகளை திருடி வெளிநாடுகளில் விற்பனை செய்யும் சுபாஷ் சந்திர கபூரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது.
இந்தியாவில் இருக்கும் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகளை சட்டத்துக்கு புறம்பாக திருடிச் சென்று, அமெரிக்காவில் விற்பனை செய்து வந்தவர் சுபாஷ் சந்திர கபூர். இங்கிருந்து திருடிச் செல்லும் சிலைகள் நியூயார்க்கில் விற்பனை செய்யப்படுவதை அறிந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், இந்தியாவிடம் சிலைகளை மீண்டும் ஒப்படைக்குமாறு தகவல் அனுப்பியதன் பேரில், சுபாஷ் சந்திர கபூர் சிலைகளை கடத்திச் சென்று விற்பனை செய்தது அம்பலமானது.
இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்த போலீசார், கடந்த 2011 ஆம் ஆண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் சுபாஷ் சந்திர கபூர், தனது உடல்நலத்தை காரணம் காட்டி ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனு விசாரணையின் போது, இவருக்கு ஜாமீன் கொடுத்தால் தப்பி சென்று விடுவார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago