Skip to main content

துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன!

Sep 24, 2020 320 views Posted By : YarlSri TV
Image

துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன! 

அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் நள்ளிரவில் வழிப்பறி, கஞ்சா விற்பனை போன்ற குற்ற சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று

காவல் ஆய்வாளர்களுக்கு மாவட்ட துணை ஆணையர் தீபா சத்யன் உத்தரவிட்டார்



சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த சிறந்த கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை அம்பத்தூர் காவல் துணை ஆணையர் தீபா சத்தியன் நேரில் அழைத்து பாராட்டு வழங்கினார்.



கடந்த மாதங்களில் அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் அடிக்கடி தொடர்ச்சியாக செல்போன் பறிப்பு நள்ளிரவு தாக்குதல் என அரங்கேறிய நிலையில் இதுபோன்ற வழக்குகளை துரிதமாக கையிலெடுத்த காவல்துறையினர் குற்றவாளிகளை விரைந்து பிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளனர்.



துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன



நிகழ்ச்சியில் கொரட்டூர், அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயில், மாங்காடு, பூவிருந்தவல்லி ஆகிய காவல் நிலைய உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை