அமெரிக்காவில் இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி!
Sep 19, 2020 292 views Posted By : YarlSri TV
அமெரிக்காவில் இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி!
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ரோஷ்டர் பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் நேற்று இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் விதிகளை மீறி நடந்த அந்த கேளிக்கை நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது அந்த நிகழ்சியில் பங்கேற்றவரில் ஒருவர் தான் மறைத்து கொண்டுவந்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த அங்கு கூடியிருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓட்டம் பிடித்தனர்.
ஆனாலும், அந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,14 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை கைது செய்யும் நடவடிக்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
நிவர் புயல் பாதிப்புகள் குறித்து தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்!
-
கல்வியில் புதிய மாற்றங்களை முன்மொழிந்த இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். கல்வி ராஜாங்க அமைச்சருடன் விசேட சந்திப்பு!
-
உலகின் மிக உயரமான கட்டிடத்தில் ஒளிர்ந்த தமிழ்! எங்கு தெரியுமா?
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1495 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1495 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1496 Days ago