ஷியாவில் ஒரே நாளில் 5,529 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!!
Sep 16, 2020 319 views Posted By : YarlSri TV
ஷியாவில் ஒரே நாளில் 5,529 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!!
ரஷியாவில் ஒரே நாளில் 5,529 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,529 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 10,73,849-ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர, கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 150 போ், சிசிக்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 18,785-ஆக அதிகரித்துள்ளது.அந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த 8,84,305 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா்.
1,70,759 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் சுமாா் 2,300 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.ரஷியாவில் 10 லட்சம் பேருக்கு 7,358 போ் என்ற விகிதத்தில் கரோனா பாதிப்பு உள்ளது.
மேலும் 10 லட்சம் பேரில் 129 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago