திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து போலீசார் விடிய விடிய சோதனை!
Sep 11, 2020 245 views Posted By : YarlSri TV
திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து போலீசார் விடிய விடிய சோதனை!
திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் 120 ரயில்கள் வந்து செல்கின்றன.
தற்போது கொரோனா காலம் என்பதால் இதன் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக பொருட்களும் ரயில் மூலம் சென்னை உட்பட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், வெடிகுண்டு தயாரித்து விற்கும் 'தீபாவளி தீவிரவாதி' நடமாடுவதாக கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். மோப்ப நாயும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் .
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago