ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என ஜெர்மனி மிரட்டல் விடுத்துள்ளது!
Sep 08, 2020 233 views Posted By : YarlSri TV
ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என ஜெர்மனி மிரட்டல் விடுத்துள்ளது!
ரஷியாவின் முக்கிய எதிர்க்கட்சியான ‘எதிர்கால ரஷியா’ கட்சியின் தலைவர் அலெக்சி நவல்னி. அதிபர் புதினையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சனம் செய்வதோடு ஊழலுக்கு எதிராகவும் பிரசாரம் செய்து வந்தார்.
இவர் கடந்த மாத இறுதியில் சைபீரியாவின் டோம்ஸ்க் நகரிலிருந்து விமானம் மூலம் மாஸ்கோ சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் குடித்த ‘டீ’ யில் விஷம் கலந்திருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் ரஷியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில் அலெக்சி நவல்னி தற்போது ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அலெக்சி நவல்னிக்கு என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என ரஷியாவை ஜெர்மனி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரஷியா மீதான தனது நெருக்கடியை ஜெர்மனி மேலும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி ஹெய்க்கோ மாஸ் கூறியதாவது:-
நவல்னி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக நாங்கள் நடத்தி வரும் விசாரணையில், ரஷியா தனது பங்களிப்பை அளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு ரஷியா ஒத்துழைக்கத் தவறினால், அந்த நாட்டுடன் மேற்கொண்டுள்ள ‘நார்ட் ஸ்ட்ரீம் 2’ கடலடி குழாய் திட்டத்தை நாங்கள் கைவிட வேண்டியிருக்கும். அந்த திட்டம் தொடர்பான எங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் நிலைக்கு ரஷியா எங்களை கொண்டு செல்லாது என்று நம்புகிறேன்.
நவல்னி விவகாரத்தில் நாங்கள் விரைவில் தொடங்கவிருக்கும் விசாரணைக்கு ரஷியா ஒத்துழைப்பு அளிக்காவிட்டால், கடலடி குழாய் திட்டத்தில் தொடர்புடைய மற்ற நாடுகளுடன் இதுதொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிப்பது குறித்தும் நாங்கள் ஆலோசிக்க வேண்டி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
விபச்சார விடுதி நடத்தியவர் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவரையும்விளக்க மறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
-
மகள் கடத்தல் விவகாரத்தில் மோதல் பாகிஸ்தானுக்கான தூதரை திரும்ப அழைத்தது ஆப்கான்: அதிபர் அஷ்ரப் கனி உத்தரவு!
-
பலாப்பழம் சாப்பிட்ட உடனே தப்பித் தவறி இதை மட்டும் சாப்பிடாதீங்க.... உயிருக்கு ஆபத்து?
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago