பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 441 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
Sep 10, 2020 342 views Posted By : YarlSri TV
பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 441 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 441 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்க உள்ளது.
பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பாகிஸ்தானில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''புதிதாக 441 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,99,855-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 1,444 பேர் குணமடைந்ததால், கரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,87,950-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு 5,540 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,365-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் அதிக அளவாக சிந்து மாகாணத்தில் 1,31,115 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பஞ்சாபில் 97,461 பேரும், கைபர்-பக்துன்க்வா பகுதியில் 36,755 பேரும், இஸ்லாமபாத்தில் 15,804 பேரும், பலூசிஸ்தானில் 13,227 பேரும்,
கில்கிட்-பால்டிஸ்தான் 3,137 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,356 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago