பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,97,512-ஆக உயா்ந்துள்ளது!
Sep 05, 2020 233 views Posted By : YarlSri TV
பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,97,512-ஆக உயா்ந்துள்ளது!
இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:கடந்த 24 மணி நேரத்தில் 498 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,97,512-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 7 போ் பலியாகினா். இதனைத் தொடா்ந்து, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,332-ஆக அதிகரித்துள்ளது.இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,82,268 போ் குணமடைந்துள்ளனா். 8,909 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 595 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,30,041 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாகாணத்தில் 97,044 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 23,318 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இத்துடன் நாட்டில் மொத்தம் 2,707,470 போ் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கேரளாவில் கொரோனா அதிகரித்துவரும் நிலையில் அம்மாநிலத்தில் இம்மாத இறுதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது!
-
ஐ.நா.வில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அதிருப்தி!
-
கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலக அளவிலான உற்பத்தியில் 637 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் ஆண்டனியோ குட்டரெஸ் கணிப்பு
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago