Skip to main content

சர்வதேச விமான நிலையத்திற்கு மேலே 3 ஆயிரம் அடி உயரத்தில் நபர் ஒருவர் ஜெட்பேக்-ல்!

Sep 03, 2020 257 views Posted By : YarlSri TV
Image

சர்வதேச விமான நிலையத்திற்கு மேலே 3 ஆயிரம் அடி உயரத்தில் நபர் ஒருவர் ஜெட்பேக்-ல்! 

எப்.பி.ஐ., விசாரணை... லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு மேலே 3 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் ஒன்றிற்கு மிக அருகே நபர் ஒருவர் ஜெட்பேக்-ல் பறந்து சென்ற சம்பவம் குறித்து எப்.பி.ஐ., விசாரணை நடத்துகிறது.



தங்களது விமானத்திற்கு அருகே 30 அடி தூரத்தில் ஜெட்பேக் நபர் பறந்து சென்றதாக அமெரிக்கன் மற்றும் ஜெட்புளூ விமானிகள் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.



இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம், போலீசாருக்கு தகவல் அளித்தது. இது குறித்த விசாரணையை துவக்கி உள்ள எப்.பி.ஐ., என்ன நடந்தது என்பதை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என தெரிவித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை