இனவெறியைத் தூண்டும் அரசியல்வாதிகளை மக்களே குப்பைக்குள் போட்டுவிடுவார்கள் - ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புகவெல்ல!
Aug 31, 2020 252 views Posted By : YarlSri TV
இனவெறியைத் தூண்டும் அரசியல்வாதிகளை மக்களே குப்பைக்குள் போட்டுவிடுவார்கள் - ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புகவெல்ல!
தற்போதைய அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் உண்மையான தேவைகளை கண்டறிந்து, அதற்கான
உரிய தீர்வுகளை வழங்கும்பொழுது, இனவெறியைத் தூண்டும் அரசியல்வாதிகளை மக்களே குப்பைக்குள் போட்டுவிடுவார்கள் என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புகவெல்ல தெரிவித்தார். இந்த வகையில் அம்மக்களின் சுகாதாரம், கல்வி, பொருளாதார மற்றும் விவசாய பிரச்சினைகளை விரைவில் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
நேற்று முன்தினம் (29) அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடாதிபதிகளை சந்தித்து ஆசிபெற்றபின் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கெஹெலிய ரம்புகவெல்ல, வடக்கு. கிழக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக தோன்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த முயற்சி பயனற்றுப் போய் அவர்களது பிரதிநிதிகள் தொகை 16 இலிருந்து 10 ஆக குறைந்து கீழ் நிலைக்கு செல்லும் போது பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் டி என்.ஏ யின் பாத்திரத்தை அரங்கேற்றுவதற்கு இனவாத கருத்துக்களை முன்வைக்கிறார்.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அபிலாஷைகள் வேறு, ஏக பிரதிநிதிகளாக பிரதிநிதித்துவப்படுத்த முயற்சிக்கும் கட்சிகளின் அபிலாஷைகள் வேறு, இருவரினதும் எண்ணங்களும் எதிர்பார்ப்புக்களை சமமானவை அல்ல என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago