Skip to main content

செப்.28 முதல் கோயம்பேடு சந்தை திறக்கப்படும் - ஓ.பன்னீர் செல்வம்

Aug 28, 2020 266 views Posted By : YarlSri TV
Image

செப்.28 முதல் கோயம்பேடு சந்தை திறக்கப்படும் - ஓ.பன்னீர் செல்வம் 

தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக கடந் மே மாத தொடக்கத்தில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது. பின்னர் மாதவரம் மற்றும் திருமாழிசை பகுதிகளில் தற்காலிக சந்தை திறக்கப்பட்டது.



இந்நிலையில் கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளதால் கடுமையான வியாபார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்கத்தினர் தொடர்ச்சியாக கூறி வந்திருந்தனர். இந்நிலையில், இன்று கோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் சீரமைத்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்துடன் கோயம்பேடு வணிக வளாக அங்காடிகளை திறப்பது குறித்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனையை இன்று மாலை மேற்கொண்டிருந்தார்.



இதன் தொடர்ச்சியாக கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் ஒவ்வொரு கட்டமாக அங்காடிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

10 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை