சுக நல மேம்பாட்டுக் குழு யாழ்ப்பாணம் மறவன்புலோ கிராமத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது...!
Jun 02, 2020 300 views Posted By : YarlSri TV
சுக நல மேம்பாட்டுக் குழு யாழ்ப்பாணம் மறவன்புலோ கிராமத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது...!
கொரோனா வைரஸ் போன்ற பாரிய தொற்று நோய்கள், எதிர்காலத்தில் ஏற்படும் போது, கிராம மட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 'சுக நல மேம்பாட்டுக் குழு' யாழ்ப்பாணம் மறவன்புலோ கிராமத்தில், அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அங்குரார்ப்பண நிகழ்வு, மறவன்புலபு ஜே-298 கிராம சேவையாளர் நல்லதம்பி தனபாலசிங்கம் தலைமையில், மறவன்புலவு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
டெங்கு, கொரோனா, மலேரியா போன்ற தொற்று நோய்கள், எதிர்காலத்தில் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை, கிராம மட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கும், அதேபோன்று போதைவஸ்து பாவனை, பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற அனைத்து வகையான சமூகப் பாதிப்புக்களையும் இல்லாதொழிக்கும் நோக்கில், பொது அமைப்புகளை உள்ளடக்கிய, சுக நல மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பிரதேச செயலர், பொலிஸ், இராணுவம், மற்றும் சுகாதார பரிசோதகர், கிராம சேவையாளர், குடும்ப நல உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோருடன், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சுக நல மேம்பாட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
15 பேரைக் கொண்ட குழுவின் தலைவராக கிராம சேவையாளரும், செயலாளராக பொதுச் சுகாதார பரிசோதகரும் செயற்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில், தென்மராட்சி பொதுச் சுகாதார மேற்பார்வையாளர் பி.பிரபாகரன், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, குடும்ப நல உத்தியோகத்தர் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago