தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை...!
Jun 05, 2020 341 views Posted By : YarlSri TV
தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை...!
பிரித்தானியாவில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தண்டனையை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட Alex Hepburn (24) என்ற இளைஞன் பிரித்தானியாவின் Worcestershire கிரிக்கெட் அணியில் வீரராக இருந்தவர்.
இவர் கடந்த 2017 அடுக்குமாடி வீட்டுக்குள் மதுபோதையில் நுழைந்து தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக அவர் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட Alex மீது லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
அப்போது நீதிபதி ஜிம் கூறுகையில், Alex-ம் அவர் நண்பரான கிரிக்கெட் வீரர் Joe Clarkeம் சேர்ந்து பல பெண்களிடம் பாலியல் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என முடிவு செய்து அந்த செயலிலும் ஈடுபட்டனர்.
அப்போது தான் சம்பவம் நடந்த இரவில் Joe இளம்பெண் ஒருவரின் விருப்பத்துடன் அவருடன் உறவு கொண்டார், பின்னர் உடல்நலப்பிரச்சனை ஏற்பட்டதையடுத்து Joe கழிப்பறைக்கு சென்றார்.
அந்த சமயத்தில் அங்கு வந்த Alex தூங்கி கொண்டிருந்த அப்பெண்ணை வன்கொடுமை செய்து, தாக்கியுள்ளார்.
இந்த குற்றத்துக்காக Alexக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தார்.
இந்த நிலையில் தண்டனையை எதிர்த்து Alex லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று இரண்டு நீதிபதிகள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago