சிகிச்சை அளித்த வைத்தியரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி
May 31, 2020 284 views Posted By : YarlSri TV
சிகிச்சை அளித்த வைத்தியரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி
எகிப்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த வைத்தியரை காதலித்து நோயாளி ஒருவர் கரம்பிடித்துள்ளார்.
ஆயிஷா மொசபா என்ற பெண் எகிப்து நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் வைத்தியராக வேலை பார்த்து வருகிறார்.
அந்த மருத்துவமனையில் முகமது பாமி என்பவர் கொரோனா நோய் தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது மருத்துவர் ஆயிஷா தான் அவருக்கு சிகிச்சை பார்த்துள்ளார். இதற்கிடையே அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இதையடுத்து இரண்டு மாதமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று குணமடைந்த முகமது பாமி மோதிரம் அணிந்து ஆயிஷாவிடம் காதலை வெளிப்படுத்தினார்.
இதற்கு சற்றும் மறுப்பு தெரிவிக்காமல் அவரது காதலை ஆயிஷாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த ஜோடிக்கு பலரும் தங்களது பாராட்டுதலைத் தெரிவித்து வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago