அணு ஆயுதங்களை மேம்படுத்துவது தொடர்பாக, கிம் ஜாங் அன் தலைமையில் முக்கிய ஆலோசனை
May 25, 2020 350 views Posted By : YarlSri TV
அணு ஆயுதங்களை மேம்படுத்துவது தொடர்பாக, கிம் ஜாங் அன் தலைமையில் முக்கிய ஆலோசனை
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்ததாகவும் அது தோல்வியடைந்ததால் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் கடந்த மாதம் பல வதந்திகள் பரவின. இதையடுத்து, வட கொரிய அதிபரின் உண்மையான நிலையை அறிந்துகொள்ள பல நாடுகளும் முனைப்புக்காட்டின. இறுதியாக ஒரு உரத் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் கிம் ஜாங் அன் கலந்துகொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் நேற்று வடகொரியா தலைநகர் பியாங்காங்கில் நடந்த ஒரு முக்கிய ராணுவ கூட்டத்தில் தலைவர் கிம் ஜாங் அன் கலந்துகொண்டதாக அந்நாட்டின் அரசு ஊடகம் கே.சி.என்.ஏ செய்தி வெளியிட்டுள்ளது. அந்த கூட்டத்தில் வட கொரியாவின் அணு ஆயுதங்களை மேம்படுத்துவது, நாட்டின் ஆயுதப் படைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் வைப்பது மற்றும் பிறநாட்டிலிருந்து வரும் அச்சுறுதல்களுக்கு எதிராக தங்கள் நாட்டின் சக்தியை அதிகரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட கொரிய ராணுவத்தின் தலைவர் கிம் ஜாங் அன், துணை தலைவர் பாக் ஜாங் சோன், ஆயுத மேம்பாட்டு பொறுப்பில் இருக்கும் அந்நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி பியோங் சோல் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக கே.சி.என்.ஏ ஊடகம் தெரிவித்துள்ளது. வடகொரியா அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் தன் நாட்டின் அணுசக்தி திறனை மேம்படுத்த கிம் ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கொடிகாமத்தில் ராணுவத்தினரால் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!
-
கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் 13 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அஹலியகொட பொலிஸாரால் பலீகல பிரதேசத்தில் வைத்து டிஎன்ஏ பரிசோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சந்தேக நபர் இன்று (வியாழக்கிழமை) அவிசாவளை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 2009 ஆம் ஆண்டு அஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் பாடசாலை சீருடையுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
-
24,000 ரேபிட் கிட்கள்... தமிழகத்திற்கு இது போதுமா?
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago