Skip to main content

கடமையில் இருந்த இராணுவ வீரர் மீது தாக்குதல்....!

May 24, 2020 354 views Posted By : YarlSri TV
Image

கடமையில் இருந்த இராணுவ வீரர் மீது தாக்குதல்....! 

இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள இராணுவ காவலரணில் நின்ற சிப்பாய் மீது நேற்று மாலை தாக்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.



இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இம்மூவரும் முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் என்றும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.



இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய இம்மூவரும் கோப்பாய், அனலைதீவு மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



இதேவேளை, இவர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

16 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை