யாழின் முதலாவது கொரோனா நோயாளி வீடு திரும்பினார்..!
May 27, 2020 317 views Posted By : YarlSri TV
யாழின் முதலாவது கொரோனா நோயாளி வீடு திரும்பினார்..!
யாழில் கொரோனோ தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட முதலாவது நபர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் நேற்றைய தினம் இரவு வீடு திரும்பியுள்ளார் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவர் கட்டட ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்வது தொடர்பாக சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மத போதகருடன் பழகியமையால் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி இருந்தார். கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி கொரோனோ தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கொழும்பில் சுமார் 65 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உடல் நலம் தேறி வீடு திரும்பியுள்ளார். குறித்த நபருக்கு நீரிழிவு நோய் தாக்கம் இருந்தமையால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த காரணத்தால் நீண்ட கால சிக்கிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago