Skip to main content

அமெரிக்காவில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று - ட்ரம்ப் மீது ஒபாமா பாய்ச்சல்.......!

May 10, 2020 399 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று - ட்ரம்ப் மீது ஒபாமா பாய்ச்சல்.......! 

இழப்புக் குறித்து சிறிதும் கவலைப்படாத டிரம்ப் அரசால் அமெரிக்கா பேரிழப்பை சந்தித்துள்ளது என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.



அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் சுமார் 25 ஆயிரத்து 542 பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.



அமெரிக்காவில் தற்போது கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 47 ஆயிரமாக உள்ளது. அதிபரின் வெள்ளை மாளிகையில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று மட்டும் கொரோனாவுக்கு ஆயிரத்து 422 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது.



கொரோனா காலகட்டத்தில் மட்டும் சுமார் 2 கோடி அமெரிக்கர்கள் தங்கள் வேலையை இழந்துள்ள நிலையில், அதிபர் டிரம்ப்பின் குழப்பமான முடிவுகளை தற்போதைய மோசமான நிலைக்கு காரணம் என முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா விமர்சித்துள்ளார்.



இது குறித்து சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இழப்புக் குறித்து சிறிதும் கவலைப்படாத அரசால் அமெரிக்கா இன்று பேரிழப்பை சந்தித்துள்ளது. சுயநலவாதியாகவும், பழமைவாதியாகவும், நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலும் இருக்கும் ஒரு அரசாங்கத்தால் தற்போது அமெரிக்கா பாதிப்படைந்து உள்ளது.



உலக நாடுகள் அமெரிக்காவை உன்னிப்பாக கவனிக்கின்றன என்பதை மறந்து ஒரு அரசு செயல்படுகிறது. இந்த நிர்வாகம் அமெரிக்காவிற்கு பயனற்றது என நினைக்கிறேன். அதனால் ஜீ பிடனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட போகிறேன்.



இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் கொரோனா விவகாரம் அமெரிக்க தேர்தலில் முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை