Skip to main content

லண்டனில் பரவும் புதிய வகை நோய்.....!

May 15, 2020 325 views Posted By : YarlSri TV
Image

லண்டனில் பரவும் புதிய வகை நோய்.....! 

பிரித்தானியாவில் குழந்தைகளிடம் புதிய வகை அழற்சி நோய் பரவி வருவது அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.



கவாசாகி நோய் போன்றே கடுமையான காய்ச்சலுடன், தோலில் சிவப்பு தடிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.



5 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிப்பதுடன், சில குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சையும் தேவைப்படுகிறது.



இதுவரையிலும் பிரித்தானியாவில் மட்டும் 100 குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.



கடந்த ஏப்ரல் மாதமே இந்த நோய் பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.



அதீத காய்ச்சல், சொறி, சிவந்த கண்கள், உடல் வலி, வீக்கம் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.

லண்டனில் மட்டும் 8 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மூச்சுத்திணறல் பிரச்சனையால் பாதிக்கப்படாத நிலையிலும் இதயத்துடிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்காக வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர்.



பிரித்தானியா மட்டுமின்றி அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்தில் இந்நோய் பரவி வருவது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை