ஊரடங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
Apr 20, 2020 351 views Posted By : YarlSri TV
ஊரடங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
ஊரடங்கு காரணமாக காப்பகத்தில் தங்கியுள்ள குஜராத்தை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு, சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கேக் வெட்டி பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளனர்.
கடந்த மார்ச் 21 அன்று இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய ஏராளமான வெளிமாநில பயணிகளில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 11 வயது பெண் குழந்தை ஷிருஷ்டியும் ஒருவர்.
ஆன்மீக சுற்றுலா வந்திருந்த இவர்கள் ஊரடங்கு காரணமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வழியின்றி சிக்கிக் கொண்டனர். அவர்கள் அனைவரையும் மீட்டு சென்னை மாநகராட்சி காப்பகங்களில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள காப்பகத்தில், ஷிருஷ்டியின் குடும்பத்தினர் உள்ளிட்ட 74 பேர் தங்கியுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய சொந்த மண்ணில், சொந்த பந்தங்களுடன் விமரிசையாக கொண்டாடி வந்த தன்னுடைய பிறந்த நாளை இந்த ஆண்டு கொண்டாட முடியவில்லையே என்று ஏங்கியிருந்த ஷிருஷ்டிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது சென்னை மாநகராட்சி.
ஷிருஷ்டியின் பிறந்தநாளை கேள்விப்பட்டு உடனடியாக கேக் ஆர்டர் செய்தனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள். காப்பகத்தில் தங்கியிருந்த மக்களுடன் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி, தனக்காக கேக் வாங்கி கொடுத்த அதிகாரிக்கு முதல் கேக்கை கொடுத்து பதில் நன்றி செய்தார் ஷிருஷ்டி.வந்தோரை வாழ வைக்கும் தமிழகம், இப்போது பிறந்தநாள் பரிசும் அளித்து ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சிக்கு மக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago